உள்நாட்டு செய்திகள்

மீனவ சமூகம் அவதானத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தல்



(FASTNEWS | COLOMBO) – கொழும்பிலிருந்து காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரையான கடற்கரை பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களத்தால் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதன்படி காற்றின் வேகமானது 70 – 80 கி.மீ வரையில் வீசக்கூடுமென்றும், மீன்பிடி தொழில்கள் மற்றும் ஏனைய கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு திணைக்களத்தால் கோரப்பட்டுள்ளது.

மேலும் நாளை மற்றும் நாளை மறுதினம் பலத்த மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஊழல் ஒழிப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

Azeem Kilabdeen

திருடர்களை பிடிக்கும் அமைச்சொன்றை கோருகிறார் ரஞ்சன்

wpengine

21ஆவது திருத்தச் சட்டமூலம் அமைச்சரவையில் இன்று நிறைவேற்றம்

wpengine