Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மீண்டும் மின் துண்டிப்பா ? – 6 வாரங்களுக்கு மூடப்பட்டது களனிதிஸ்ஸ அனல்மின் நிலையம்..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  எரிவாயு மற்றும் நீராவி விசையாழியின் பராமரிப்பு பணிகள் காரணமாக களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தின் செயற்பாடுகள் நேற்று முதல் 6 வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியல் பிரிவு தெரிவித்துள்ளது.

பணிநிறுத்தம் காரணமாக தேசிய மின்கட்டமைப்பு 165 மெகாவாட் மின்சாரத்தை இழக்கும்.

இதேவேளை, தொழிநுட்பக் கோளாறு காரணமாக இயங்காத நுரைச்சோலை லக் விஜய அனல் மின் நிலையத்தின் இரண்டாவது மின் உற்பத்தி இயந்திரத்தை தேசிய மின்னழுத்தத்துடன் இணைக்க சுமார் 05 நாட்கள் ஆகும் என மின்சார சபை எதிர்பார்க்கிறது.

உயர் அழுத்த ஹீட்டர் அமைப்பில் திடீரென கோளாறு ஏற்பட்டதால், ஆலையின் இரண்டாவது ஜெனரேட்டரை மூட வேண்டிய நிலை ஏற்பட்டதாக நேற்று சபை அறிவித்தது.

தேசிய மின்கட்டமைப்பு நிறுத்தப்படுவதால் 300 மெகாவாட் மின்சாரத்தை இழக்கும்.

அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மூன்றாவது மின் உற்பத்தி இயந்திரமும் தற்போது இயங்கவில்லை.

இதனால் 300 மெகாவாட் மின்சாரத்தை மின்சார சபை இழக்கும்.

எவ்வாறாயினும், தொடர்ந்து மின்சார விநியோகத்தில் எவ்வித இடையூறும் ஏற்படாது என மின்சார சபை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

தொடர்ந்து நீர்மின்சாரம் உற்பத்தி செய்து மின்சாரம் வழங்குவதாகவும் மின்சார சபை அறிவித்துள்ளது.

தற்போது, நீர்மின் நிலையங்களுடன் தொடர்புடைய நீர் கொள்ளளவு 88 சதவீதமாக அதிகரித்துள்ளது.

Related posts

லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட ஆகியோரின் மேன்முறையீட்டு மனு ஒத்திவைப்பு…

wpengine

“அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் மாற்றப்படலாம்” – பதியுதீன்…

wpengine

CSN அலைவரிசையை கைமாற்ற தடை விதிப்பு.

wpengine