Top Story 2உள்நாட்டு செய்திகள்

மீண்டும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டம் இல்லை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மீண்டும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை என பாதுகாப்புப் படைகளின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இத்தருணத்தில் சகல பிரஜைகளும் பொறுப்புடன் செயற்படுவதும் சுகாதாரமான நடைமுறைகளை கடைபிடிப்பதும் மிகவும் அவசியமானது என இராணுவத் தளபதி தெரிவித்தார்.

இதேவேளை, சமூகத்தில் இனங்காணப்பட்ட பெரும்பாலான கொரோனா வைரஸ்கள் ஒமிக்ரோன் வைரஸ் வகையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் பணிப்பாளர் டொக்டர் ரஞ்சித் பட்டுவந்துடாவ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் மேலும் 1,331 கொரோனா தொற்றாளர்கள் நேற்று (06) பதிவாகியுள்ளனர்.

அதன்படி, நாட்டில் மொத்தமாக 618, 520 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் மேலும் 23 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்றுமுன்தினம் மரணங்களை உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் இதுவரை 15,595 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

Related posts

ஓரங்கட்டப்படும் கோட்டாபய, எழுச்சிபெறும் நாமல்..!

wpengine

கணித மாதிரிகளின் அடிப்படையில் வானிலை தகவல்களை வெளியிட வளிமண்டலவியல் திணைக்களம் நடவடிக்கை…

wpengine

யாழில் பாரிய தீ விபத்து; திடிரென தீ பற்றிய வாகனங்கள்

wpengine