உள்நாட்டு செய்திகள்

மிரிஹானவில் பேருந்தை எரித்த சந்தேக நபர் சிக்கினர்!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் (Gotabaya Rajapaksa) இல்லத்திற்கு செல்லும் பகுதியில் கடந்த ஒருமாதத்திற்கு முன்பாக இடம்பெற்ற அரச எதிர்ப்பு போராட்டத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் பேருந்து உட்பட சில வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
இந்த சம்பவம் நுகேகொடை மிரிஹான பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
இந்த நிலையில் பேருந்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

Related posts

வெள்ளத்திலிருந்து தப்பிக்க வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை

wpengine

பணிப்புறக்கணிப்பினை கைவிடாத விடத்து சாரதி மற்றும் நடத்துனர்களுக்கான அனுமதிப் பத்திரம் இரத்து..

wpengine

பொலிஸ் ஆணைக்குழு சுயாதீனத்தை இழந்துள்ளது

wpengine