உலக செய்திகள்

மியன்மாரில் ஓராண்டுக்கு அவசர நிலை



(ஃபாஸ்ட் நியூஸ் | மியன்மார்) – மியன்மாரில் கடந்த சில வாரங்களாகவே தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் அந்நாட்டு இராணுவத்துக்கும் இடையே மோதல் நிலவி வந்த சூழலில், மியன்மார் அரசு ஆலோசர் ஆங் சான் சூகி, ஜனாதிபதி உள்ளிட்டோரை இராணுவம் சிறைபிடித்ததை தொடர்ந்து மீண்டும் இராணுவப் புரட்சி ஏற்படுமோ என்ற பரபரப்பு நிலவியது.

இந்நிலையில், மியன்மாரில் ஓராண்டுக்கு அவசர நிலை பிறப்பிக்கப்படுவதாக அந்நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது.

மியான்மர் பொதுத்தேர்தலில் முறைகேடு நடந்ததால் அவசர நிலை அமுல்படுத்தப்பட்டு உள்ளதாக இராணுவ தரப்பில் தெரிவித்துள்ளது.

மியான்மரில் இன்று பாராளுமன்றம் கூட இருந்த நிலையில், இராணுவத்தின் இந்த நடவடிக்கையால் அந்நாட்டில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மியன்மாரில் நடைபெற்ற 2ஆவது பொதுத்தேர்தலில் ஆங் சான் சூகி கட்சி அமோக வெற்றி பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நச்சுக் காற்றினால் கண்கள், மூக்குகளில் இரத்தக் கசிவு…

wpengine

எகிப்து ஜனாதிபதியாக அப்துல் சிசி மீண்டும் தேர்வு…

wpengine

பங்களாதேஷின் கட்டிட தொகுதி ஒன்றில் தீ விபத்து – 60 பேர் உயிரிழப்பு…

wpengine