உள்நாட்டு செய்திகள்

மின் துண்டிப்பு வேண்டாம் : பரீட்சை திணைக்களம் மின்சார சபையிடம் கோரிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  2022 க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நடைபெறும் காலப்பகுதியில் தடையற்ற மின்சார விநியோகத்தை தொடருமாறு பரீட்சை திணைக்களம் நேற்று இலங்கை மின்சார சபை (CEB) மற்றும் Lanka Electricity Co. (Pvt) Ltd. (LECO) நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக திணைக்கள ஆணையாளர் நாயகம் H.J.M.C. அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

2022 க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சைகள் திட்டமிட்டபடி திங்கட்கிழமை (23) ஆரம்பமாகி பெப்ரவரி 17 ஆம் திகதி வரை நடைபெறும் என அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

எனவே மேற்படி காலப்பகுதியில் தடையற்ற மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. “சில தேர்வு மையங்களில் வானிலை நன்றாக இருந்தாலும் தேர்வு கூடங்களுக்கு விளக்கு வசதிகள் தேவைப்படுகின்றன.” “கோரிக்கைகளை தொடர்ந்து அதிகாரிகளிடம் இருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளது,” என்றார்.

Related posts

காற்றின் வேகம் அதிகரிக்க கூடும்…

wpengine

வாகன விபத்தில் இலங்கையர்கள் மூவர் பலி

wpengine

இலங்கைக்கெதிரான போட்டியில் இந்திய அணி 5 விக்கட்டுக்களால் வெற்றி

wpengine