உள்நாட்டு செய்திகள்

மாத்தறை மாணவன் உயிரிழப்பு – மூன்றாவது சந்தேகநபருக்கும் விளக்கமறியல்…


மாத்தறையில் மாணவன் ஒருவர் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்றாவது சந்தேக நபரை எதிர்வரும் டிசம்பர் 03ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று(28) உத்தரவிட்டுள்ளது.

மாத்தறை, எலவில்ல பிரதேசத்தில் கடந்த 24 ஆம் திகதி மாணவ குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

குறித்த மாணவன் மாலை நேர வகுப்பு ஒன்றுக்கு அருகில் வைத்து கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நிதி மோசடி விசாரணை பிரிவிடமிருந்து பிரசன்னவுக்கு அழைப்பாணை

wpengine

தேசிய பாடசாலைகளுக்கு மாத்திரமே டெப் கணனிகளை வழங்க அமைச்சரவை அனுமதி

wpengine

20வது அரசியலமைப்பு : ஆய்வுக்கு குழு

wpengine