Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மஹிந்த ஏன் திடீரென ஜனாதிபதியை தொடர்பு கொண்டார்?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு திடீர் தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.

இருவரும் கணிசமான நேரம் நீண்ட கருத்துகளை பரிமாறிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த திடீர் அமைச்சரவை மாற்றம் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளதாகவும், அது இடம்பெற்ற விதம் தொடர்பில் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொஹொட்டுவ வகித்து வந்த அமைச்சுப் பதவிகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டு அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டமையே முன்னாள் ஜனாதிபதியின் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தமையும் தெரிந்ததே.

“பொஹொட்டுவா இந்த அரசாங்கத்தை அமைப்பதற்கும் உங்கள் நிலைப்பாட்டைக் காப்பாற்றுவதற்கும் உங்களுக்கு ஆதரவளிக்கிறது, அதை மறந்துவிடாதீர்கள்” என்றும் மஹிந்த ராஜபக்ஷ இங்கு தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

இன்றிரவு 8 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்

wpengine

இலங்கை அணியின் இடக்கை பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் ஓய்வு குறித்து கருத்து..

wpengine

சரணவின் விளக்கமறியல் நீடிப்பு

wpengine