உள்நாட்டு செய்திகள்

மழை காரணமாக கடும் வாகன நெரிசல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பின் சில பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, பத்தரமுல்லை, ராஜகிரிய மற்றும் ஆமர் வீதி ஆகிய பிரதேசங்களில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தற்போது கொழும்பில் பெய்து வரும் கடும் மழை காரணமாக இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, மேல், தென், மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று (23) காலை மேல் மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை வீழ்ச்சி பதிவானதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

அரச நிறுவன ஊழியர்களுக்கான அறிவித்தல்

wpengine

சாதாரண தரம் சித்தியடையாவிடினும் உயர்தரம் பயில வாய்ப்பு..

wpengine

14 நாட்களுக்குள் தீர்வில்லாவிடின், அடுத்த கட்ட நடவடிக்கை – தபால் தொழிற்சங்கம்…

wpengine