உலக செய்திகள்

மலாலா தாக்குதலில் சந்தேகித்த எட்டுப் பேர் விடுதலை



பாகிஸ்தான் நாட்டில் பெண் கல்வியை வலியுறுத்திய இளம்பெண் மலாலா மீது தாக்குதல் நடத்திய 10 பேரில் 8 பேரை அந்நாட்டு நீதிமன்றம் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த 2012-ஆம் ஆண்டு பள்ளியிலிருந்து பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்த மலாலாவை தலிபான் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டமை தொடர்பிலேயே இவ்வழக்கு பதிவாகியது.

இதுதொடர்பாக 10 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவ்வழக்கு தொடர்பான விசாரணையானது, அந்நாட்டில் உள்ள பயங்கரவாத ஒழிப்பு நீதிமன்றத்தில் ரகசிய முறையில் விசாரிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 10 பேரில் 8 பேரை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளதாக பிரிட்டனில் உள்ள செய்தி நிறுவனம் ஒன்று தகவல்  தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் 2 பேருக்கு எதிராக மட்டுமே போதுமான சாட்சியங்கள் இருப்பதாகக் கூறி, மற்ற 8 பேரையும் நீதிபதி விடுதலை செய்து உத்தரவிட்டதாக அந்தச் செய்தி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

பயங்கரவாதிகளுக்கு அஞ்சாமல் பெண் கல்வியை வலியுறுத்தி வரும் குழந்தைகளின் உரிமைகள் நல ஆர்வலர் மலாலாவுக்கு கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

காசா எல்லையில் இஸ்ரேல் வான்தாக்குதல் – சிறுவர்கள் 3 பேர் உயிரிழப்பு…

wpengine

பயங்கரவாதத்திற்கு இந்தியா நிதியுதவி வழங்குகின்றது – பாகிஸ்தான் அமைச்சர்

wpengine

இஸ்ரேல் தாக்குதல் – அல்ஸிபா மருத்துவமனையில் மூன்று தாதிமார் பலி

wpengine