உள்நாட்டு செய்திகள்

மருந்துகளுக்கு தட்டுப்பாடு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் இரண்டு மாதங்களுக்கு தேவையான மருந்துகளே கையிருப்பில் உள்ளதாக இலங்கை ஒளடத இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஒளடத இறக்குமதிக்கான முன்பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் நாணய கடிதத்தைப் பெறுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக ஒளடதங்களுக்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் எனவும் ஒளடத இறக்குமதிக்காக முன்னர் வழங்கப்பட்ட முக்கியத்துவம் தற்போது வழங்கப்படுவதில்லையெனவும், குறித்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் பயன்படுத்தப்படும் மருந்துகளில் 80 சதவீதமானவை இறக்குமதி செய்யப்படுகின்றன.

Related posts

ஜா-எல – வத்தளை பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்

wpengine

இரணைத்தீவுக்கு இதுவரை அனுமதி வழங்கவில்லை

wpengine

ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கடும் வாகன நெரிசல்…

wpengine