உள்நாட்டு செய்திகள்

மருத்துவ பீடத்தின் இறுதியாண்டு பரீட்சைகள் ஆரம்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 8 மருத்துவ பீடங்கள் இறுதியாண்டு பரீட்சைகளுக்காக இன்று(15) பல்கலைக்கழகங்கள் திறக்கப்பட்டன.

எழுத்துப் பரீட்சையின் பின்னர், செயன்முறை பரீட்சை மற்றும் பயிற்சிகள் வைத்தியசாலைகளில் நடத்தப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பல்கலைக்கழக மாணவர்களின் இறுதியாண்டு பரீட்சைகளை இம்மாதம் 22 ஆம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் 15 ஆம் திகதிக்குள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக நாளை மறுதினம் முதல் நீர் விநியோகம் தடை …

wpengine

விடயதானங்கள் தொடர்பான வர்த்தமானி இன்று

wpengine

தபால்மூல வாக்களிப்பில் புகைப்படம் எடுத்த மூவர் கைது

wpengine