உள்நாட்டு செய்திகள்

மருத்துவமனைகளில் பரசிட்டமோல் மருந்துக்கு தட்டுப்பாடு..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

நாட்டில் உள்ள சில மருத்துவமனைகளில் பரசிட்டமோல் மருந்துக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே இவ்வாறு தெரிவித்தார்.

பொதுவாக இந்நாட்டில் நோயாளிகளின் சிகிச்சைக்காக 1300க்கும் மேற்பட்ட வகையான மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் 383 வகையான மருந்துகள் அத்தியாவசிய மருந்துகளாகக் கருதப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் நாட்டில் தற்போது சுமார் 160 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

தனமல்வில – வெல்லவாய வீதி விபத்தில் மூவர் பலி..

wpengine

தினமும் என்னைப்பற்றிய அவதூறுகளே – ரிஷாட் குற்றச்சாட்டு

wpengine

முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை பாதுகாக்க புதிய எல்லை நிர்ணயம் அவசியம் – ஷாம் நவாஸ்..!

wpengine