உள்நாட்டு செய்திகள்

மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பலாங்கொடை – பின்னவல வலவத்த தோட்டத்தில் மரம் முறிந்து வீழ்ந்தமையினால் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்த நிலையில் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வலவத்த தோட்டத்தைச் சேர்ந்த இரு தொழிலாளர்கள் கொழுந்து பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையில், இவ்வாறு மரம் முறிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் பின்னவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

இராணுவத்தில் இருந்து விலகிய நபர்கள் மீண்டும் சேவையில்

wpengine

ஜே.ஆர்.ஜெயவர்தனவின் புதல்வர் ரவி ஜெயவர்தன காலமானார்…

wpengine

இதுவரையில் 620 பேர் பூரண குணம்

wpengine