ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மனைவியின் கழுத்தை அறுத்து கொன்று கணவனும் கழுத்தறுத்துக் கொலை



யாழ் வடமராட்சி பகுதியில் மனைவியின் கழுத்தை அறுத்து படுகொலை செய்த கணவன், தனது கழுத்தையும் அறுத்துக்கொண்டு கிணற்றுக்குள் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளான்.

தாளையடி பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த சிவபாலன் (வயது 40) அவரது மனைவியான எஸ்.சுபாஷினி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்தவர்கள் ஆவார்கள்.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது;

கணவன் மனைவிக்கு இடையில் நேற்று இரவு 9.30 மணியளவில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனை அடுத்து வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியின் கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ளார்.

பின்னர் தனது கழுத்தையும் கத்தியால் அறுத்தவாறு கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்துள்ளார். என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்

Related posts

மனித உருவில் மீன்

wpengine

இனி சமூக வலைதள விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் – அமெரிக்க விசாவுக்கு புதிய நிபந்தனை…

wpengine

பெண்ணின் தகாத உறவால் மகன் பலி

wpengine