கேளிக்கை

மனைவியிடம் சவால் விட்டு செயற்கையாக பிரசவ வலி உணர்ந்த கணவன் – கண்ணீர் கலந்த அன்பில் முடிந்த நிகழ்வு…



ஒரு நல்ல நாளில் தாம் மிட்சல்சன் தன் மனைவியிடம் தவறான வார்த்தைகளை பிரயோகம் செய்தார்.

மிகவும் மோசமான வார்த்தைகள் அவை; அதன் முடிவில் தனது மனைவியிடம் தான் செயற்கையாக பிரசவ வலியை உணரவும் தயார் என சவாலும் விடுத்தார். தன் மகனிடம் மருத்துவமனையில் பிரசவ வலி குறித்து டாம் மற்றும் ஜென்னி பேசிக் கொண்டிருந்த போது தான் இந்த நிகழ்வு துவங்கியது…

பிரசவலி பற்றி பேசிக் கொண்டிருந்த போது, டாம் தனது மகனிடம் “நீ பிறந்த அடுத்த 24 மணி நேரம் தான் மிகவும் கொடுமையான தருணம். உறக்கமற்று, அந்த பிளாஸ்டிக் சேரில்..” என விவரித்துக் கொண்டிருந்தார்.

டாம் விவரித்துக் கொண்டிருக்கும் போதே, குறிக்கிட்ட ஜென்னி, ” அது கொடுமையான தருணமா? டாமுக்கு தெரியும், ஜென்னி எரிச்சல் அடைந்துவிட்டார் என்பது.

திடீரென டாமுக்கு ஒரு யோசனை வந்தது. பெண்கள் பிரசவலி மிகவும் கடுமையானது என கூறுகின்றனர். அதை உணர்ந்து பார்த்தல் தான் என்ன என்று.இதற்காக ஒரு மருத்துவமனையை தேர்வு செய்து, மனைவியிடம் சவால் விட்டது போல செயற்கையாக பிரசவலி உணர முடிவு செய்தார் டாம்.

திடீர் யோசனை!

ஆறுமாத குழந்தைக்கு அப்போது தந்தையாக இருந்த டாமுக்கு அது சற்று உற்சாகமாக இருந்தார். ஆம்ஸ்டர்டாம்-ல் உள்ள பர்த் ஹோட்டலில் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அது ஒரு தனியார் பிரசவ மையம் ஆகும்.

அங்கு டாமுக்கு சிமுலேஷன் மெஷின் பொருத்தப்பட்டது. இதன் மூலம் டாமுக்கு பிரசவ வலி உண்டாக்கி, அதை உணர வைத்தனர். இதன் மூலம் ஒரு பெண் எப்படி பிரசவ வலியை உணர்கிறாரோ, அப்படியே படிப்படியாக வலி உணர செய்தனர்.

சிமுலேஷன் மெஷின்!

பிரசவத்தின் போது பெண்கள் கடந்து வரும் மூன்று நிலை வலியும், சிமுலேஷன் மூலமாக ஒன்றில் இருந்து பத்து வரை என்ற அளவில் வலி உணர்வு அதிகரிக்க பட்டது. அருகில் இருந்து ஜென்னி டாமை பார்த்துக் கொண்டார்.

மிகவும் வலி மிகுந்த தருணம்!

சிமுலேஷன் மூலமாக வலியை உணர்ந்த பிறகு, மீண்டு வந்த டாம், “தனது வாழ்க்கையில் இதுபோன்ற வலியை நான் எப்போதும் உணர்ந்தது இல்லை” என கூறினார்.

சல்யூட்!

Related posts

“அலாவுதீன் மற்றும் அற்புத விளக்குகள்” 26ம் திகதி முதல் நாடுபூராகவும்…

wpengine

மற்றுமொரு சினிமா பிரபலம் உயிரிழப்பு

wpengine

106 வயதுடைய பாட்டியம்மாவுக்கும் ஆசை தான்… [VIDEO]

wpengine