Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மண்டியிட்ட பசில், ஜனாதிபதி சொல்வது போல் செய்யவும் தயார்..!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்டர்களுக்கு அமைச்சுப்பதவி கிடைக்கவில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்காமல் இருக்க முடியாது என பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவுடனான கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமது கருத்தின்படி ஜனாதிபதி செயற்படாவிட்டால் அவருக்கு ஆதரவளிப்பதில் அர்த்தமில்லை என சுட்டிக்காட்டியுள்ள இக்குழுவினர், இதுவரையில் அமைச்சுப் பதவி கிடைக்காதது குறித்தும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், அமைச்சுப் பதவி கிடைக்கவில்லை என்பதற்காக ஜனாதிபதிக்கு ஆதரவளிக்காமல் இருப்பது பொதுஜன பெரமுன பெரமுனவின் கருத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், ஜனாதிபதி ஆணைப்படி செயற்படுவதால் தொடர்ந்தும் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஆனால் ஜனாதிபதி ஆணைக்கு முரணாகச் செல்லும் நிலை ஏற்பட்டால் அது தொடர்பில் அவதானம் செலுத்தி அந்தத் தருணத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Related posts

இலவன்குளம் – மறிச்சிக்கட்டி பாதையை பொதுமக்கள் பாவனைக்கு திறந்து விட இணக்கம்! மார்ச் 25 இல் இறுதித் தீர்மானத்துக்கு வர உச்ச நீதி மன்றில் முடிவு.

wpengine

மரண தண்டனை குறித்த இலங்கையின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது – ஐரோப்பிய ஒன்றியம்

wpengine

ஜனாதிபதி தலைமையில் 110 நிறுவனங்களுக்கு விருதுகள்

wpengine