Uncategorized

மகளை கற்பழித்து “நான் உன்னை எப்போதும் காதலிப்பேன்” எனக்கூறிய தந்தை



அவுஸ்திரேலியாவில் 38 வயது நிரம்பிய தந்தை ஒருவர் 20 வருடங்களுக்கு பின்னர் சந்தித்த தனது மகளை கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரைச் சேர்ந்த அப்பெண், பிறந்ததிலிருந்து தனது தந்தையை பார்த்தது கிடையாது, இந்நிலையில் 20 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் தனது தந்தையை முதல் முறையாக பார்க்கப்போகிறோம் என்ற சந்தோஷத்தில் இருந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, எனது தந்தையை பார்த்தவுடன் மிகவும் சந்தோஷமாக இருந்தேன், இந்நிலையில் நாங்கள் இருவரும் ஒருநாள் தனியாக இருந்தபோது, “அப்பாவை கட்டிக்கொள்” என்று தந்தை கூறினார்.

பின்னர், படுக்கையறையில் வைத்து என்னை பலவந்தமாக கற்பழித்துவிட்டு, நான் உன்னை எப்போதும் காதலிப்பேன் என்று கூறினார்.

அவர், என்னிடம் தவறாக நடக்கமுயன்றபோது என்னால், அவரை தடுக்கமுடியாமல் ஒத்துழைத்துவிட்டேன், ஏனெனில் அவரது கடந்த காலங்கள் வன்முறைகள் நிறைந்ததாகும், அதுமட்டுமின்றி இவர் இதற்கு முன்னர் சிறைதண்டனை அனுபவித்துள்ளார் என்பது எனக்கு தெரியும்.

அதனால், என்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை என்று கூறியுள்ளார், தற்போது இதுதொடர்பாக பொலிசில் புகார் தெரிவித்ததையடுத்து, தந்தையிடம் பொலிசார் நடத்திய விசாரணையில், எனது மகளை நான் இழந்துவிடக்கூடாது என்ற காரணத்தினாலேயே இவ்வாறு செய்தேன் என்று கூறியுள்ளார்,

இருப்பினும் இதுதொடர்பாக நடைபெற்ற வழக்கில், அறிவுரீதியாக ஊனமுற்றவர்கள் பின்னணில் அவருக்கு 3 வருடங்கள் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Related posts

மேலும் ஐவருக்கு கொரோனா; 309ஆக உயர்வு

wpengine

நாக்கின் நுனியால் கண்ணைத் தொடும் இளம்பெண்: கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பம்

wpengine

ஃபாஸ்ட் நியூஸ் வழங்கும் இன்றைய கேலிச் சித்திரம்

wpengine