Top Story 2உள்நாட்டு செய்திகள்

போதைப்பொருள் பாவனையாளரின் திருமணத்திற்கான, விண்ணப்பத்தை நிராகரித்த பள்ளிவாசல்..!

– பாறுக் ஷிஹான் –

போதைப்பொருள் பாவனைக்கு உள்வாங்கப்பட்ட நபர் ஒருவரின் திருமணத்திற்கான சமய அங்கீகாரத்தை அக்கரைப்பற்று ஜும்மா பெரிய பள்ளிவாசல் நிராகரித்துள்ளது.

அக்கரைப்பற்று ஜும்மா பெரிய பள்ளிவாசல்  பிரதேசத்திற்குள் வசித்து வரும் நபர் ஒருவரின் திருமணத்தை நடாத்தி வைக்குமாறு  ஜும்மா பெரிய பள்ளிவாசலுக்கு விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது.

குறித்த விண்ணப்பத்தை பரீசீலனைக்காக எடுத்துக் கொண்ட ஜும்மா பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை குறித்த நபர் போதை பொருள் பாவனைக்கு உள்வாங்கப்பட்பட்டவர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எனவே திருமண  சடங்கை நிறைவேற்றி வைப்பதை தவிர்த்துள்ளதுடன்  குறித்த விண்ணப்பத்தையும் நிராகரித்துள்ளது.

அத்துடன் குறித்த திருமணத்திற்கான மணமகனை போதைப் பொருள் புனர்வாழ்வு மையத்தில் அனுமதிப்பதுடன் அங்கிருந்து நற்சான்றிதழ் பத்திரம் பெற்று மீண்டும்  பள்ளிவாசலில் சமர்ப்பிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

குறித்த இவ்விடயம் சமூக ஊடகங்களில் முக்கிய பேசு பொருளாக மாறி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த உதவுங்கள்

wpengine

அரச ஊழியர்களுக்கு பயிற்சிகளை வழங்க மலேசிய அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு..

wpengine

எல்ல – வெல்லவாய வீதியின் போக்குவரத்து தொடர்ந்தும் மட்டு

wpengine