உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் உயரதிகாரிகள் 53 பேருக்கான இடமாற்றம் இரத்து…


பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் உதவிப் பொலிஸ் கண்காணிப்பாளர்களின் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் 53 பேருக்கு திடீரென வழங்கப்பட்ட இடமாற்ற உத்தரவானது உடன் அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யுமாறு நேற்று(31) பொலிஸ் ஆணைக்குழு, தெரிவித்துள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதி இன்றி பொலிஸ்மா அதிபரால் குறித்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்டுகின்றது.

பூஜித் ஜயசுந்தரவால் இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டமையாது இன்று(01) முதல் ஒரு மாத காலத்திற்கு நடைமுறையில் இருக்கும் கட்டளையின் கீழ் ஆகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இலங்கை குழு ஜெனீவாவை சென்றடைந்துள்ளது…

wpengine

முறைப்பாடுகளுக்கு பதிவு செய்ய அவசர இல

wpengine

குடு ரொஷான் உள்ளிட்ட 7 பேர் கைது

wpengine