பொலன்னறுவை பிராந்திய வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
மின்னேரியா தேசிய பூங்காவில் பணிபுரியும் வனஜீவராசி அதிகாரிகளை தாக்கிய சம்பவத்தைத் தொடர்ந்தே குறித்த அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இதன் காரணமாக கவுடுல்ல, மின்னேரியா, வஸ்கமுவ, அங்கம்மெடில்ல ஆகிய பூங்காக்களுக்கு செல்வதில் சுற்றுலாப் பயணிகள் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர்.
களப்பணிகள் மற்றும் சுற்றுலா சேவையிலிருந்து விலகி, அலுவலக சேவையை மட்டுமே முன்னெடுப்பதாக கவுடுல்ல தேசிய பூங்காவின் பொறுப்பதிகாரி கூறியுள்ளார்.