உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பொதுபல சேனா,சிஹல ராவய,ராவணா பலய ஒரு தலைமையில் கீழ்



இவ்வளவு காலமும் வெவ்வேறாய் பிரிந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்த பௌத்த அமைப்புக்கள் மூன்று நேற்றைய தினம்(09) ஒரு அமைப்பாக ஒன்று சேர்ந்தது.

குறித்த அமைப்புக்களாவன; பொதுபல சேனா அமைப்பு, சிஹல ராவய மற்றும் ராவணா பலய போன்ற அமைப்புக்களே இவ்வாறு ஒன்று சேர்ந்துள்ளன.

சிங்கள பௌத்தர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டே குறித்த மூன்று அமைப்புக்களும் ஒன்று சேர்ந்து இனிவரும் காலங்களில் ஒரு அமைப்பாக தங்கள் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும், பொதுபல சேனா அமைப்பின் பிரதான செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இன்னும், கிராம,மாவட்ட மற்றும் மாகாண மட்டத்திலும் வரும் காலங்களில் குறித்த அமைப்பானது செயற்பாடுகளை முன்னெடுக்கும் எனவும் தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இந்தோனேசிய சுனாமியில் இதுவரை 225 பேர் பலி…

wpengine

மழையுடனான வானிலை தொடரும்

wpengine

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சக்தி அமைச்சு கோரிக்கை…

wpengine