உள்நாட்டு செய்திகள்

பேரூந்துகளில் மீதிப்பணம் தராவிடின் இவ்விலக்கத்திற்கு அழையுங்கள்…



பற்றுச்சீட்டு அல்லது மீதிப்பணம் வழங்காத பேரூந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு அறிவிக்குமாறு, பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக 011 555 9595 எனும் விசேட தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கிடைக்கும் முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கு தமது ஆணைக்குழு தயாராக உள்ளதாக ஆணைக்குழுவின் மேல் மாகாண சபை தலைவர் துசித குலரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும், உரிய விலையை விடவும் அதிக கட்டணம் அறிவிடும் பேரூந்து தொடர்பிலும் அறிவிக்குமாறும் மேலும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

இரண்டாம் தவணை விடுமுறை நாளை ஆரம்பம்

wpengine

லசந்த கொலை – தீவிர விசாரணைகள் ஆரம்பம்

wpengine

இலங்கைக்கு ஒரு மில்லியன் Sinovac தடுப்பூசிகள்

wpengine