Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பேருவளையில் 11 கொரோனா நோயாளிகள் அடையாளம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்–19) – கொரோனா தொற்றாளர்களாக இன்று (22) இனங்காணப்பட்ட 11 பேரும் பேருவளை பிரதேசத்தில் உள்ளவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவர்கள் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளவர்கள் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இரண்டாவது இடத்தில் களுத்துறை மாவட்டம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 321ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கிலக்காகி இதுவரை 104 பேர் குணமடைந்துள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பதுளை – கொழும்பு நேர அஞ்சல் ரயில் சேவைகள் இரத்து…

wpengine

2018ம் ஆண்டுக்கான முதலாம் தர மாணவர்களை இணைத்துக் கொள்ளும் சுற்றுவட்டம் ஜூன் மாதம்.

wpengine

கொரோனா வைரஸ் – மேலும் ஒருவர் அடையாளம்

wpengine