உள்நாட்டு செய்திகள்

பேருந்து கட்டணம் தொடர்பில் தீர்மானமில்லை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பேருந்து கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லையெனப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

ஜனவரி மாதம் முதல் பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என லங்கா தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன விடுத்துள்ள கருத்துக்குப் பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, தமது பேருந்துகளில் பயன்படுத்தப்படும் எரிபொருள் தரமற்றவையென இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

புகையிரத பெட்டிகளை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பம்…

wpengine

அரசியலமைப்பு பேரவை இன்று கூடுகின்றது

wpengine

சிறைச்சாலை கைதிகளுக்கு அரச நிறுவனங்களில் தொழில் பயிற்சி

wpengine