Top Story 1உள்நாட்டு செய்திகள்

பெற்றோல், டீசல் விலைகளில் மாற்றமில்லை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

அதன்படி, மண்ணெண்ணெய் 05 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய அதன் புதிய விலை 183 ரூபாவாகும்.

இதேவேளை, பெற்றோல் மற்றும் டீசல்  விலைகளில் எவ்விதமான மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டத்தாபனம் அறிவித்துள்ளது.

இதேவேளை, லங்கா ஐஓசி மற்றும் சினோபெக் ஆகிய நிறுவனங்களும் சிபெட்கோவின் எரிபொருள் திருத்தத்திற்கு அமைய செயற்படுவதாக அறிவித்துள்ளன.

 

Related posts

அவன்ட்கார்ட் கெப்டனின் விளக்கமறியல் நீடிப்பு

wpengine

விடுமுறையை முன்னிட்டு விசேட ரயில் சேவை

wpengine

பல்கலைக்கழக செயற்பாடுகளுக்கு ஒம்புட்ஸ்மன் குழு

wpengine