உள்நாட்டு செய்திகள்

பெறுமதி சேர் வரி அதிகரிப்பு குறித்து பிரதமர் – ஜனாதிபதிக்கு இடையில் விசேட சந்திப்பு



வட் வரி எனப்படும் பெறுமதி சேர் வரி அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு மேலதிகமாக சிரேஸ்ட அமைச்சர்களும் இந்த சந்திப்பில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சந்திப்பு அலரி மாளிகையில் இந்த வாரத்தில் நடத்தப்பட உள்ளதாக பிரதமர் அலுவலகத் தகவல்களை ஆதாரம் காட்டி தகவல்கள்  வெளியிடப்பட்டுள்ளது.

வட் வரி அதிகரிப்பானது நுகர்வோரையே பாதிக்கும் எனவும் தொலைபேசிக் கட்டணம், நீர் கட்டணம், மின்சாரக் கட்டணம், அத்தியாவசிய பொருட்கள் போன்றவற்றில் தாக்கத்தை செலுத்தும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, வட் வரி அதிகரிப்பிற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி நாடளாவிய ரீதியில் போராட்டமொன்றை நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சட்டவிரோத மின்சாரத்தால் மற்றொரு உயிர் பலி

Azeem Kilabdeen

உதயங்கவை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை [ UPDATE]

wpengine

கடவத்தையில் துப்பாக்கிச்சூடு – பெண்ணொருவர் காயம்…

wpengine