Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

புறக்கோட்டையில் அமைந்துள்ள கபூர் கட்டிடம் தனிமைப்படுத்தலுக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கொழும்பு – புறக்கோட்டையில் அமைந்துள்ள கபூர் கட்டிடத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் இனங்காணப்பட்டதை தொடர்ந்து குறித்த கட்டிடம் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்திருந்தார்.

மேலும், குறித்த தொற்றுக்குள்ளானவர் கடற்படையைச் சேர்ந்த வீரர் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

அத்துடன், குறித்த கட்டிடத்தில் இருந்த சுமார் 200 கடற்படை வீரர்கள் இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள், வெலிசர கடற்படை முகாமில் தங்கி சிகிச்சை பெற்று வரும் கடற்படை வீரர்களது உதவி ஒத்தாசைகளுக்கு உள்வாங்கப்பட்டவர் என்றும், அவர்கள் சமூகத்துடன் கலந்திருக்கவில்லை எனவும் கடற்படை ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

முன்னாள் ஜனாதிபதி கொலைச்சதி குறித்து பிரபல பாடகி சமிதாவுக்கு CID அழைப்பு

wpengine

ரயான் ஜயலத்தின் விளக்கமறியல் நீடிப்பு..

wpengine

CID அதிகாரி நிஷாந்த சில்வாவுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்..

wpengine