ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

புதனன்று அமைச்சரவை மாற்றம்..



நாளை(21) அமைச்சரவை மாற்றமானது முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தற்பொழுதுள்ள அரசியல் நெருக்கடி நிலைமையை தீர்த்ததன் பின்னர், புதிய அமைச்சரவையொன்றை நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

தேசிய அரசாங்கம் தொடர்ந்தால், அமைச்சர்களின் எண்ணிக்கையில் மாற்றம் வரமாட்டாது எனவும், குறிப்பிட்ட சில அமைச்சுக்களுக்கான அமைச்சர்கள் மாற்றம் இடம்பெறும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இருப்பினும், தேசிய அரசாங்கம் அல்லாவிடின், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 30 பேரும், அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களின் எண்ணிக்கை 45 பேராகவும் இருக்க வேண்டும் என 19 ஆவது திருத்தச் சட்டம் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

#rishma

Related posts

பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்களது சேவைக் கட்டணங்களும் அதிகரிப்பு…?

wpengine

இலங்கை​யில் மீண்டும் கொரோனா தாக்கும் சாத்தியம்; அதிர்ச்சி தகவல்

wpengine

ஐ.நா அமர்வின் முடிவில் இலங்கைக்கு பொருளாதாரத் தடை?

wpengine