உலக செய்திகள்

புகையிரத நிலையங்களில் செல்பி எடுக்க தடை..


தமிழகத்தில் உள்ள ரயில்வே நிலையங்களில், ரயில் பாதைகளில், பொது மக்கள் ‛செல்பி’ எடுக்க ரயில்வே துறை தடை விதித்துள்ளது.

சென்னை, கிண்டி ரயில் நிலையத்தில் சில மாதங்களுக்கு முன் இளைஞர் ஒருவர், ரயில் பாதையில் நின்று ‛செல்பி’ எடுக்க முயன்றார். அப்போது ரயில் மோதி படுகாயம் அடைந்தார்.

அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சில நாட்களுக்கு முன் மரணமடைந்தார். இதை தொடர்ந்து, தமிழகத்தில் ரயில்வே ஸ்டேஷன்கள், ரயில் பாதைகளில், பொதுமக்கள் ‛செல்பி’ எடுக்க ரயில்வே துறை தடை விதித்துள்ளது.

‛தடையை மீறி ‛செல்பி’ எடுக்க முயற்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் ரயில்வே துறை எச்சரித்துள்ளது.

Related posts

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை (VIDEO)

wpengine

கோரோனா வைரஸ்; பலி எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்தது

wpengine

கென்ய பாராளுமன்றத்தில் இருந்து குழந்தையுடன் பெண் உறுப்பினர் ஒருவர் வெளியேற்றம்

wpengine