உள்நாட்டு செய்திகள்

புகையிரத ஊழியர்களை உடனடியாக சேவைக்கு சமூகமளிக்குமாறு அறிவித்தல்…



அனைத்து புகையிரத தொழிநுட்ப சேவையின் ஒப்பந்த மற்றும் மேலதிக பணியாளர்களை உடனடியாக சேவைக்கு சமூகமளிக்குமாறு புகையிரத பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு சேவைக்கு சமூகமளிக்காவிட்டால் அவர்கள் சேவையில் இருந்து விலகியதாக கருதப்படுவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புகையிரத திணைக்களத்துடன் இணைந்த சில தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ள போதிலும் இதன் மூலம் புகையிரத போக்குவரத்திற்கு பாரியளவிலான பாதிப்புக்கள் இல்லை என்று பிரதி அமைச்சர் அசோக்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.

இன்றைய தினத்தில் 300 தடவைகள் புகையிரத சேவையில் ஈடுபடுத்தப்படவிருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Related posts

ஜனாதிபதி தலைமையில் இரு நூல்கள் இன்று வெளியீடு

wpengine

சிறுபான்மையினரை எதிர்த்து 20வது திருத்தத்தை அரசு நிறைவேற்றின் நாம் ஒன்று கூடி எதிர்ப்போம்

wpengine

சீரற்ற காலநிலையால் 214 பேர் பலி.. 24,962 அனர்த்த முகாம்களில்..

wpengine