உள்நாட்டு செய்திகள்

புகையிரதத்தில் மோதுண்ட மாணவிகளின் இறுதிக்கிரியைகள் குறித்து விசேட அறிவித்தல்



நேற்று முன் தினம் தெஹிவளை பிரதேசத்தில் ரயிலில் மோதுண்டு பலியான மாணவிகளின் இறுதிக் கிரியைகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தகவல்களை குறித்த மாணவிகள் கல்வி கற்ற பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் வெளியிட்டுள்ளது.

ஒன்றாக இந்த உலகில் இருந்து விடைபெற்ற தோழிகள் இருவரினதும் இறுதிக் கிரியைகள் ஒன்றாகவே நடைபெற வேண்டும் என பழைய மாணவர் சங்கம் தமது பேஸ்புக் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் குறித்த மாணவிகளின் இறுதிக் கிரியைகளானது நாளைய தினம் மாலை நான்கு மணிக்கு பொரல்லை பொதுமயானத்தில் ஒரே நேரத்தில் இடம்பெறும் என்றும் புனித கன்னியர் மடத்தின் பழைய மாணவர் சங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை பலியான மாணவிகளில் செரோனின் சடலம் கொழும்பு தனியார் மலர்ச்சாலையில் மக்கள் அஞ்சலிக்காக இன்றைய தினம் வைக்கப்பட்டுள்ளதோடு, இமேசியின் சடலம் களனியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

holy

Related posts

முட்டை விலையும் அதிகரிப்பு

wpengine

நிலவும் வறட்சியின் காரணமாக களுத்துறையில் குடிநீர் பிரச்சினை…

wpengine

ரயில்வே பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

wpengine