சூடான செய்திகள்

பிள்ளையுடன் ஆற்றில் பாய்ந்தமை தொடர்பில் விசாரணை



மாத்தறை மஹாநாம பாலத்தினூடாக நில்வலா கங்கைக்குள் தனது பிள்ளையுடன் பெண்ணொருவர் பாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் சோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் பயணப் பொது மஹாநாய பாலத்திற்கு அருகிலிருநந்து நேற்றிரவு கண்டுபிடிக்கப்பட்டதாபக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதற்கமைய எழுந்துள்ள சந்தேநகத்திற்கு அமைய கடற்படையினருடன் பொலிஸ் உயிர் பாதுகாப்பு பிரிவினரும் இணைந்து சோதனை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பாலத்திற்குள் பாய்ந்துள்ள பெண் இரத்மலான பொருப்பன பகுதியை சேர்ந்த 35 வயதான ஆசிரியர் ஒருவரென விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பாலத்திற்கருகிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட பயணப்பொதியிலிருந்து மீட்கப்பட்ட கையடக்க தொலைப்சேியில் குறித்த பெண்ணின் உறவினரொருவருக்கு மேற்கொண்ட அழைப்பின் பிரகாம், தனது எட்டு வயது பிள்ளையுடன் பெண் வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

யானை – மொட்டு கூட்டணி அரசாங்கத்தினால் திருகோணமலை மாவட்டம் திட்டமிட்டு புறக்கணிப்பு..!

wpengine

சனல் 4 ஆவணப்படத்தில் கருத்து தெரிவித்த ஆசாத்மௌலானாவின் தந்தை விடுதலைப்புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டவர் – ஐலண்ட்

wpengine

2017ம் ஆண்டுக்கான தகவல் தொழில்நுட்ப பரீட்சையின் பெறுபேறுகள் வௌியானது…

wpengine