ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பிறந்து சில மணி நேரமேயான குழந்தையின் உடற்பாகங்களைக் கொண்டு வந்த மிருகங்கள் !!



இராகலை – ஹைபொரஸ்ட் தோட்டத்தில், பிறந்து சில மணிநேரத்தில் கைவிடப்பட்ட சிசு ஒன்றின் உடற்பாகங்கள்  பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரிவருவதாவது,

சிசு ஒன்றின் சில உடற் பாகங்களை வளர்ப்பு மிருகங்கள் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு கொண்டு வந்துள்ளன.

இதனை அவதானித்த அப் பிரதேசவாசிகள் 119 என்ற பொலிஸ் அவசர அழைப்பிற்கு தகவல் வழங்கி உள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த, பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் போது மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இருந்து குறித்த சிசுவின் மிகுதி உடற்பாகங்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சிசுவை பிரசவித்தவர் தொடர்பில் இதுவரை எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் இராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Related posts

இன்று திரையுலகை மிரள வைத்து “டைட்டானிக்” திரைப்படத்தினை தோற்கடிக்க வருகிறது Do Lafzon Ki Kahani (VIDEO)

wpengine

ஏழைகளின் விசாவில் உம்ரா சென்ற முஸ்லிம் காங்கிரசின் பணக்கார மாகாணசபை உறுப்பினர் றிஸ்வி ஜவாகர்ஷா

wpengine

படங்களின் வசூலுக்கு அணைபோட்ட மழை

wpengine