உள்நாட்டு செய்திகள்

பிரதியமைச்சர் மஸ்தானின் முக்கியஸ்தர் முனாஜித் மௌலவி அமைச்சர் றிஷாட்டுடன் இணைந்து கொண்டார்…



வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான காதர் மஸ்தானின் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றிய மௌலவி எம்.கே.முனாஜித் (சீலானி), அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீனுடன் நேற்று மாலை (10) இணைந்து கொண்டார். இவருடன் அபூபக்கர் முஹம்மது இர்ஷாட் மௌலவியும் அமைச்சர் றிஷாட்டின் அரசியல் பயணத்தில் கைகோர்த்தார்.

அமைச்சர் றிஷாட்டுடன் இணைந்து கொண்ட பின்னர் கருத்து தெரிவித்த முனாஜித் மௌலவி அமைச்சர் றிஷாட் பதியுதீனுடன் இணைந்து மக்கள் பணிகளுக்காக தன்னை தொடர்ந்தும் அர்ப்பணிப்பேன் எனவும் பல்வேறு சவால்களுக்கும் சதிகளுக்கும் மத்தியில் சேவையாற்றி வரும் அமைச்சர் றிஷாட் பதியுதீனின் கரங்களை பலப்படுத்தும் நோக்கிலேயே தான் இந்த முடிவை மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.

-ஊடகப்பிரிவு-

Related posts

சிகரெட் உபயோகத்தினை விட பீடியை உபயோகிப்பதால் ஏற்படும் பாதிப்பு குறைவு..

wpengine

நஸீர் அஹமட்டிற்கு எதிரான தீர்ப்பு, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது – சுமந்திரன்..!

wpengine

சீரற்ற காலநிலை – மண்சரிவு அபாய எச்சரிக்கை

wpengine