உள்நாட்டு செய்திகள்

பிக்குவின் காவியுடையை சட்டத்தரணியால் அகற்ற முடியாது – மஹிந்த



அரசாங்கம் பௌத்த குருமார்களுக்கான சட்டங்களை நடைமுறைப்படுத்த எடுக்கும் முயற்சி குறித்து அனைத்து பௌத்த நிலையங்களும் கவனம் செலுத்தி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட எம்.பி.யுமான மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்திருப்பதாவது,

அரசினால் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள பௌத்த குருமார்களுக்கான ஒழுக்க சட்டக் கோவை பிரேரணையானது இலங்கையின் கலாசார பாரம்பரியத்தின் தனித்துவத்திற்கு எதிரானதாகும்.

பிக்குகளை பிக்குத் தலைமைகளே நிர்வகிக்க வேண்டும். அதைவிடுத்து பிக்குவின் காவியுடையை சட்டத்தரணியால் அகற்றி வெளியேற்ற முடியாது.

வரலாற்றுக் காலம் தொடக்கம் நாட்டுக்கு எதிராக சவால்கள் தலைதூக்கியபோது பௌத்த குருமாரே முகம் கொடுத்தனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

பொகவந்தலாவையில் லயன் குடியிருப்பில் தீ விபத்து…

wpengine

2019 – வரவு செலவு திட்டம் மீதான பாராளுமன்ற விவாதம், நவம்பர் 08ல் ஆரம்பம்…

wpengine

கிழக்கு மாகாணத்தை கையாள செந்தில் தொண்டமான் யார்? – அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹ்மத்..!

wpengine