ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பாழடைந்த வீடொன்றில் சிறுமியின் சடலம்



குருநாகல் – மாவத்தகம –  தல்கஸ்பிட்டிய பாலத்தின் அருகில் பாழடைந்த வீடொன்றில் இருந்து 13 வயது மதிக்கத்தக்க சிறுமியின் சடலம்  நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

சிறுமியின் வீட்டுக்கு அருகில் உள்ள பாழடைந்த வீடொன்றில் இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஆடைகள் நீக்கப்பட்ட நிலையிலேயே, சடலம் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நீதவான் பரிசோதனைக்கு பின்னர் சடலம், குருநாகல் மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவத்தகம காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கோட்டாபய அமெரிக்கா குடியுரிமையினை இரத்து செய்த ஆவணங்கள் இதோ

wpengine

வெலே சுதாவுடன் பணம் கைமாறலில் நடிகை உதயங்கி

wpengine

பாரிய எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு ஹரின் தயார்

wpengine