உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்றுக்கு படகில் வந்த மதுர விதானகே



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 9 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை ஆரம்பமானது.

புதிய பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டே நகரசபையின் முன்னாள் நகர முதல்வரான மதுர விதானகே சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக படகில் வருகை தந்திருந்தார்.

ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைவாக தியவன்ன ஓயா அபிவிருத்தி செய்யப்பட்டமையினால் இன்றைய தினம் பாராளுமன்றத்துக்கு படகில் வரமுடிந்ததாக அவர் தெரிவித்தார்.

கொழும்பு நகர வீதிகளில் வாகன நெரிசலை குறைப்பதற்காக நீர் ஓடைகள் மூலம் போக்குவரத்து செய்வதில் பொது மக்களை ஊக்குவிப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்துள்ளார்.

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 879 ஆக உயர்வு

wpengine

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் இன்று இலங்கைக்கு

wpengine

கடன் பெறுவதற்கான கலந்துரையாடல்

News Editor