Top Story 1உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்றக் கலைப்பிற்கு இன்னும் 54 நாட்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | மாத்தறை) – பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான சட்டரீதியான அதிகாரம் இன்னும் 54 நாட்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைக்க உள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இதன்படி, மார்ச் மாதம் 2 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு குறித்த சட்டரீதியான அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைக்கவுள்ளதாகவும் மாத்தறையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 110 நாட்களில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான சந்தர்ப்பம் கிடைப்பதாகவும் மாத்தறையில் இடம் பெற்ற கூட்டமொன்றில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலைப் போன்று எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களைப் பெறும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Related posts

பெரிய வெங்காயம் மற்றும் உருளை கிழங்கு மீதான விசேட வரி அதிகரிப்பு…

wpengine

கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்திற்கு பூட்டு…

wpengine

ரயில் எஞ்சின்கள் மற்றும் பெட்டிகள் இறக்குமதி

wpengine