உள்நாட்டு செய்திகள்

பாதுகாப்பு நிலைமையை அடுத்து தேசிய அடையாள அட்டை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு…



(FASTNEWS|COLOMBO) தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்வதற்காக ஆட்பதிவு திணைக்களத்திற்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு தினங்களாக தேசிய அடையாள அட்யை பெற்றுக் கொள்வதற்காக பெரும்பாலோனர் வருகை தருவதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துக்கு பின்னர் 800 க்கு மேற்பட்ட தேசிய அடையாள அட்டைகளை கடந்த வாரத்தில் விநியோகிக்கப்பட்டிருப்பதாகவும் ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் நாளாந்தம் 1600 தேசிய அடையாள அட்டைகளே விநியோகிக்கப்பட்டதுடன், தற்பொழுது 2000 தேசிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related posts

பாராளுமன்றில் திலங்கவுக்கு எதிர்ப்பு

wpengine

அமைப்பாளர் பதவியில் இருந்து சந்திரிக்கா நீக்கம்

wpengine

இன்று முதல் விசேட புகையிரத சேவை…

wpengine