Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாடசாலை மாணவி ஒருவரை வன்கொடுமை செய்த பிரதி அதிபர் கைது..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  காலி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் பிரதி அதிபர் பாடசாலை மாணவி ஒருவரை வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆரம்ப பாடசாலையில் 05 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் சிறுமியின் பெற்றோர் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் படி பொலிஸார் பிரதி அதிபரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறைப்பாடு

கடந்த 6ஆம் திகதி தொடர்பில் பாடசாலையில் சந்தேகத்திற்குரிய பிரதி அதிபரால் மாணவி துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக இது தொடர்பான முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நேற்று (16) கராப்பிட்டிய சட்ட வைத்திய அதிகாரியிடம் சிறுமியை முன்னிலைபடுத்திய பின்னர் சந்தேகத்திற்குரிய பிரதி அதிபர் ஹபராதுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

59 வயதான சந்தேகநபரான பிரதி அதிபர் காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நீர்த்தேக்கங்கள், ஆறுகள் பெருக்கெடுக்கும் அபாயம்

wpengine

இறுதித் தீர்மானம் இன்று

wpengine

வாகன அனுமதி பத்திரங்களை வழங்க மேற்கொள்ளப்படும் பரீட்சை தொடர்பில் ஆராய குழு…

wpengine