உள்நாட்டு செய்திகள்

பாகிஸ்தானின் 78வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பாகிஸ்தானுக்கு விஜயம்…



பாகிஸ்தானின் 78வது குடியரசு தினத்தை முன்னிட்டு இடம்பெறும் நிகழ்வுகளில் கலந்து கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 22ம் திகதி இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு பாகிஸ்தானுக்கு செல்லவுள்ளார்.

இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு பாகிஸ்தான் செல்லும் ஜனாதிபதி குடியரசு தின நிகழ்வுகளில் பங்கேற்றதன் பின்னர் அந்நாட்டு தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளிலும் ஈடுப்பட உள்ளார். குறிப்பாக இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்புகள் குறித்து கலந்துரையாட உள்ளார்.

புதிய முதலீடுகள் மற்றும் இருதரப்பு உறவுகள் தொடர்பாக பாகிஸ்தான் தலைவர்களுடன் இதன் போது பரந்தளவில் கலந்துரையாட உள்ளார். எவ்வாறாயினும் ஜப்பான் நாட்டுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பியுள்ள ஜனாதிபதி, பாகிஸ்தான் நாட்டு அரசாங்கத்தின் விசேட அழைப்பின் பேரில் குடியரசு தினத்தில் கலந்துக் கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஈஸ்டர் தாக்குதல் பற்றி மைத்திரி பாராளுமன்றத்தில் விளக்கம்..!

wpengine

மேலும் 230 பேருக்கு கொரோனா தொற்று

wpengine

வரவு செலவு திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

wpengine