Top Story 1உள்நாட்டு செய்திகள்

பல பகுதிகளுக்கும் சென்று பணத்தைத் திரட்ட, என்னிடம் மோட்டார் சைக்கிள் ஒன்றுகூட கிடையாது..!

மக்கள் பணம் தராவிட்டால், தான் சிறைக்குச் செல்லத் தயார் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,”உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான வழக்கின் தீர்ப்பில் 10 கோடி ரூபாவை செலுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

எந்தவிதத்திலும் எனக்கு 10 கோடி ரூபாவை வழங்கக்கூடிய பொருளாதார பின்புலம் கிடையாது. மக்கள் அதனைத் திரட்டித் தருவர் என்றே நான் எதிர்பார்க்கின்றேன்.

நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பணத்தைத் திரட்டுவதற்கு என்னிடம் மோட்டார் சைக்கிள் ஒன்றுகூட கிடையாது. அவ்வாறு பணம் கிடைக்காவிட்டால் நான் சிறைக்குச் செல்வேன்”என்று கூறியுள்ளார்.

Related posts

மாலபே, சைட்டம் நிறுவனத்தை பாதுகாப்பதற்கான அரசியல் சதி வெளிச்சத்திற்கு…

wpengine

27வது மகாவலி விளையாட்டு போட்டி கல்நெவ காவலி விளையாட்டரங்கில்

wpengine

தபால் மூல வாக்களிப்பு – 70 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் நிராகரிப்பு

wpengine