Top Story 3உள்நாட்டு செய்திகள்

பல்கலை மாணவரின் மரணம் தொடர்பான விசாரணைக்கு விசேட விசாரணை குழு நியமனம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் பொறியியல் தொழில்நுட்ப பிரிவின் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவரின் திடீர் மரணம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு மூவர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சுனில் சாந்த தெரிவித்தார்.

இந்தக் குழு சிரேஷ்ட பேராசிரியர் ஏ.ஏ.வை. அமரசிங்கவின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பேராசிரியர் கபில ரத்நாயக்க மற்றும் சட்டத்தரணி வை. எஸ். சந்திரசேகர் ஆகியோர் இந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், குறித்த மாணவரின் மரணம் தொடர்பான உண்மைகளை ஆராய்ந்து, பொருத்தமான அவதானிப்புகள் மற்றும் முடிவுகளை உடனடியாக வழங்குமாறு குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக துணைவேந்தர் பேராசிரியர் சுனில் சாந்த தெரிவித்தார்.

Related posts

அலிசப்ரி ரஹீம் எம்.பி. மீதான ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பில் புத்தளம் சிவில் சமூக நிறுவனங்களின் ஒன்றியத்துக்கு நயீமுல்லாஹ் கடிதம்..!

wpengine

இன்று(15) முதல் சிறைச்சாலைகளுக்கு STF…

wpengine

தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் புதனன்று..

wpengine