உலக செய்திகள்

பனிமூட்டம் காரணமாக லொறி கவிழ்ந்து விபத்து – 20 பேர் மரணம்…



பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இன்று(20) அதிகாலை ஏற்பட்ட பனிமூட்டம் காரணமாக வளைவில் திரும்பிய லொறி, வேன் மீது கவிழ்ந்ததில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கைரபுர் பகுதியில் உள்ள தெரி என்ற இடத்தில் இருக்கும் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நிலக்கரி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த லொறி கடும் பனிமூட்டம் நிலவியதால் வளையில் திரும்பிய லொறி திடீரென அருகில் வந்த வேன் மீது கவிழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் வேனில் இருந்த 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மூவர் சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளனர். 7 பேர் காயமடைந்து மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருவதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Related posts

தென் கொரியாவின் உயர்மட்ட அதிகாரிகள் குழு அமெரிக்கா விஜயம்…

wpengine

ஆப்கானிஸ்தானில் வான்தாக்குதலில் 21 பேர் உயிரிழப்பு…

wpengine

இஸ்ரேலில் அயல்நாட்டினர் வெளியேற்றத்தை எதிர்த்து பேரணி…

wpengine