உள்நாட்டு செய்திகள்

படைப் புழுவை கட்டுப்படுத்த கிருமிநாசினி அறிமுகம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சோளப் பயிர்ச் செய்கையை சேதப்படுத்தும் சேனா படைப்புழுவை கட்டுப்படுத்துவதற்கு என்.ஜி.வி எனும் கிருமிநாசினி அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக விவசாயப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி எம்.டபிள்யு.எம்.வீரகோன் தெரிவித்துள்ளார்.

ஒன்றரை வருடங்களாக மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கைகளின் பின்னர் இந்த கிருமிநாசினி கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

மொனராகலை, அம்பாறை, அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் சோளச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

படைப்புழு தாக்கத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும், காப்புறுதியாளர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படவுள்ளதுடன், சேதமடைந்த பயிர்களை மதிப்பீடு செய்யுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியிருப்பதாக விவசாயப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

 

Related posts

மண்சரிவு சிவப்பு அனர்த்த எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

wpengine

அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதி தற்காலிகமாக நிறுத்தம்

wpengine

கட்டுநாயக்காவில் தரையிறங்க வந்த விமானம் மீண்டும் மேலே  பறக்க ஆரம்பித்ததால் வீடுகளுக்கும், சொத்துக்களுக்கும் சேதம்..!

wpengine