உள்நாட்டு செய்திகள்

பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…



திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் நிதியை பயன்படுத்தி கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உருவப்படத்துடன் கூடிய நாட்காட்டிகளை அச்சிட்டு விநியோகித்த குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(04) தீர்மானித்துள்ளது.

திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான இரண்டு கோடியே 94 லட்சம் ரூபா பணத்தை செலவிட்டு, 50,000 நாட்காட்டிகளை அச்சிட்டதற்கு எதிராக குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கங்குலி’யை ஓரங்கட்டி சங்காவை தேர்வு செய்தது இதற்குத் தான்…- இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிரிதி..

wpengine

தனியார் ஊடகங்களில் ரணிலுக்கு எதிராக சேறு பூசும் பிரச்சாரங்கள்

wpengine

மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோவுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி.

wpengine