உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு ரங்கன ஹேரத் தலைமை…



இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு இலங்கை அணியின் தலைவராக ரங்கன ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணித்தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் உபாதை காரணமாக இந்த போட்டியில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படியே டெஸ்ட் போட்டிகளுக்கான அணியின் தலைவர் பொருப்பு ரங்கன ஹேரத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு போட்டிகளைக் கொண்ட இந்த போட்டித் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 7ஆம் திகதி ஆரம்பமாகின்ற அதேவேளை, 15ஆம் திகதி இரண்டாவது டெஸ்ட் போட்டியும் இடம்பெறவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான தொடரில் ஒருநாள் மற்றும் T-20 போட்டிகளும் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சேதன பசளை இறக்குமதிக்கு அனுமதி

wpengine

மட்டக்களப்பு வெபர் மைதானத்தை திறக்க ஹரீஸ் நடவடிக்கை

wpengine

உலக சந்தையில் மசகு எண்ணையில் வீழ்ச்சி

wpengine