உள்நாட்டு செய்திகள்

நேற்று 597 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா நோயாளர்களின் மொத்த எண்ணிக்கையானது 43,299 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் நேற்று கொவிட்-19 நோயுடன் அடையாளம் காணப்பட்ட 597 பேரில் அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.

இவ்வாறு புதிதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 526 பேர் பேலியகொட – மினுவாங்கொடை கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.

ஏனைய 66 பேர் சிறைச்சாலை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்பதுடன் 5 பேர் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் ஆவர்.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35,329 ஆக உயர்வடைந்துள்ளது.

இலங்கையில் பதிவான கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களின் மரண எண்ணிக்கை 201 ஆக பதிவாகியுள்ளது.

Related posts

தேரவாத பிக்குமார்கள் பதிவுசெய்தல் சட்டமூலத்திற்கு 2/3 தேவை

wpengine

அலோசியஸ் மற்றும் பலிசேன சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி…

wpengine

அணைத்து பலகலைகழக மாணவர் ஒன்றயத்தின் மாலபே தனியார் வைத்திய கல்லூரிக்கெதிரான  5 நாள் எதிப்பு ஊர்வலம்  இன்று ஆரம்பம்………………

wpengine