உள்நாட்டு செய்திகள்

நில அதிர்வுகளை கண்காணிக்க மேல்மாகாணத்திலும் மையம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் நில அதிர்வுகளை கண்காணிக்கும் 5 ஆவது மையத்தை மேல் மாகாணத்தில் ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அண்மையில் நாட்டை அண்மித்த சில பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டன.

லுணகம்வேஹர பகுதியில் நில அதிர்வுகள் உணரப்பட்டதால் நாட்டில் மேலும் நில அதிர்வுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

எனினும், அவ்வாறான எந்த தகவல்களையும் நிபுணர் குழு தமக்கு அறிவிக்கவில்லை.

இதனால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

Related posts

மூவாயிரத்திற்கும் அதிகமானோர் எலிக்காய்ச்சலால் பாதிப்பு

wpengine

50 ஆயிரம் மெற்றிக் டொன் உரத்தை ஏற்றிய கப்பல் எதிர்வரும் 8 ஆம் திகதி இலங்கைக்கு…

wpengine

திமுத் கருணாரத்னவின் சாரதி அனுமதி பத்திரம் தற்காலிகமாக இடைநிறுத்தம்…

wpengine